செவ்வாய், 15 அக்டோபர், 2013

எழுத்தறிவித்தல் விழா- தினமணி செய்தி

 
எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் ஒரு குழந்தைக்கு எழுத்தறிவிக்கிறார்

விஜயதசமியன்று (14.10.2013) திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் அறம் அறக்கட்டளை நடத்திய எழுத்தறிவித்தல் விழா நடைபெற்றது. இதில் 170 குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்,  'ஆழிசூழ் உலகு' புதினத்தை எழுதிய எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ்,  சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன், வரலாற்று ஆய்வாளர் அரவிந்தன் நீலகண்டன், தமிழ்ஹிந்து இணைய எழுத்தாளர் ஜடாயு, ’ஈ.வெ,ரா.வின் மறுபக்கம்’ நூலை எழுதிய ஹிந்துத்துவம் டுடே இணைய எழுத்தாளர் ம.வெங்கடேசன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்துவைத்தனர்.

இது தொடர்பான தினமணியில் வெளியான செய்தி கீழே.

(படத்தை சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்)

கல்வியே மிகப்பெரும் செல்வம்:
பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன்

திருப்பூர், அக். 14: கல்வியே மிகப்பெரும் செல்வம் என்று குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் விழாவில் சாஸ்திரா பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன் திங்கள்கிழமை பேசினார்.

  திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் விழா (வித்யாரம்பம்) விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் நடைபெற்றது.

  விஜயதசமியன்று குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிப்பதைத் துவங்குவது நமது மரபு. அதிலும் கல்வித்துறையில் தேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள் மூலமாக  குழந்தைகளின் நாவில் அகரம் எழுதி கல்வியைத் துவங்கிவைக்கும் பணியை அறம் அறக்கட்டளையினர் இரண்டாவது ஆண்டாக திங்கள்கிழமை திருப்பூரில் நடத்தினர்.

 இந்த எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி காலை 8 முதல் 11 மணி வரை நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் எஸ்.என்.நடராஜ் குருக்கள் இதை துவக்கி வைத்தார்.

 இதில், 'ஆழி சூழ் உலகு' புதினத்தை எழுதிய எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ், 
சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன், வரலாற்று ஆய்வாளர் அரவிந்தன் நீலகண்டன், தமிழ்ஹிந்து இணைய எழுத்தாளர் ஜடாயு, ஹிந்துத்துவம் டுடே இணைய எழுத்தாளர் ம.வெங்கடேசன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சரஸ்வதி உள்ளிட்டோர் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைத்தனர். மொத்தம் 170 குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் செய்து வைக்கப்பட்டது.


  இதில், சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன் பேசியது:

உலகில் பிற நாடுகள் கல்வியில் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு முன்னரே இந்தியாவில் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் இருந்தன. வானவியல், தத்துவம், அரசியல் என அனைத்துவிதமான நிலைகளிலும் கல்வி போதிக்கப்பட்டுவந்தது.

   விஜயதசமிநாளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் என்பது நமது பாரம்பரியமாகும். கல்விதான் மிகப்பெரும் சொத்து. எழுத்தறிவித்தல் செய்து வைக்கப்பட்ட குழந்தைகள் வருங்காலத்தில் கல்வியில் ஆராய்ச்சி பட்டம் பெற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்றார்.

  இதில், அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன், செயலாளர் கு.சிவகுமார், ஹரிபிரசாத், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
.







ஞாயிறு, 13 அக்டோபர், 2013

எழுத்தறிவித்தல் விழா- தினமணி செய்தி


நாளை எழுத்தறிவித்தல் விழா
அறம் அறக்கட்டளை நடத்துகிறது


திருப்பூர், அக். 12:  விஜயதசமியன்று அறம் அறக்கட்டளை நடத்தும் எழுத்தறிவித்தல் விழா, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் திங்கள்கிழமை (நாளை) நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூர் அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன், செயலாளர் கு.சிவகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விஜயதசமியன்று குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிப்பதைத் துவங்குவது நமது மரபு. அதிலும் கல்வித்துறையில் தேர்ந்தவர்களும் எழுத்தாளர்களும் குழந்தைகளின் நாவில் அகரம் எழுதி கல்வியைத் துவங்கிவைப்பதால் அவர்களின் வாழ்க்கை சிறப்படையும் என்பது நம்பிக்கை.

இந்தப் பாரம்பரிய நிகழ்வைப் புதுப்பிக்கும் விதமாக, திருப்பூரில் சென்ற ஆண்டு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், பேராசியர் ப.கனகசபாபதி ஆகியோர் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் செய்துவைத்தனர். இந்த ஆண்டும், அதேபோல எழுத்தாளர்களைக் கொண்டு வித்யாரம்பம் செய்யும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை எழுத்தறிவித்தல் விழா நடைபெறுகிறது. இதனை கோவில் அர்ச்சகர் எஸ்.என்.நடராஜ குருக்கள் துவங்கிவைக்கிறார்.

இந்நிகழ்வில்,  'ஆழிசூழ் உலகு' புதினத்தை எழுதிய எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ்,  சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன், வரலாற்று ஆய்வாளர் அரவிந்தன் நீலகண்டன், தமிழ்ஹிந்து இணைய எழுத்தாளர் ஜடாயு, ஹிந்துத்துவம் டுடே இணைய எழுத்தாளர் ம.வெங்கடேசன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்துவைக்கின்றனர்.

இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்வில் தங்கள் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்க விரும்புவோர், ஹரிபிரசாத் (99948 82748), சிவகுமார் (98949 33877), பாலசுப்பிரமணியன் (99444 04499) ஆகியோரைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.



- தினமணி (13.10.2013)

.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

எழுத்தறிவித்தல் விழா பேனர்கள்

திருப்பூரில் விஜயதசமியன்று நடைபெறும் வித்யாரம்பம் விழாவுக்காக நகரில் 10 இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள்...












எழுத்தறிவித்தல் (வித்யாரம்பம்) 2013 அழைப்பிதழ்



அன்புடையீர்,
வணக்கம்.
தெளிந்த அறிவு வேண்டும் என்ற எண்ணாம் கொண்ட நமது பெரியோர்கள்,  வெற்றிக்குரிய நாளான விஜயதசமி அன்று  பல்துறைகளில்  ஞானம் கொண்ட பண்டிதர்கள்குருவின்  மூலமாக தங்கள் சந்ததிக்கு எழுத்தறிவிக்கும்  (வித்யாரம்பம்)  வழக்கத்தைk  கொண்டிருந்தார்கள்
அதன் பண்பாட்டுத் தொடர்ச்சியாக நாம்   நமது  விஸ்வேஸ்வரர்  திருக்கோவிலில்வேத பண்டிதர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள்  மூலமாக எழுத்தறிவிக்கும்   நிகழ்வை நடத்த இருக்கிறோம்.  
இந்நிகழ்வில், கல்வி கற்கத் துவங்கவுள்ள  நமது குழந்தைகளை அழைத்து வந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
  • இடம் :  விஸ்வேஸ்வரர் திருக்கோவில் , திருப்பூர்.
  • நாள்: 14-10-2013 திங்கட்கிழமை, 
  • நேரம்: காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை.                                                              

எழுத்தறிவிப்போர்:

  • ஸ்ரீ. எஸ். என். நடராஜ குருக்கள் (அர்ச்சகர், விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோவில், திருப்பூர்)
  • ஸ்ரீ. இரா. ஸ்ரீனிவாஸன் (பேராசிரியர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம்) 
  • ஸ்ரீ. ஜோ டி குரூஸ் (எழுத்தாளர், 'ஆழி சூழ் உலகு’)
  • ஸ்ரீசங்கரநாராயணன் (ஜடாயு- எழுத்தாளர், தமிழ் ஹிந்து இணைய இதழ்)
  • ஸ்ரீ. அரவிந்தன் நீலகண்டன் (வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர்)
  • ஸ்ரீ. .வெங்கடேசன்   (எழுத்தாளர் - ஹிந்துத்துவம்  டுடே இணைய இதழ் )
  • சௌ. சரஸ்வதி  (சுற்றுச்சூழல் ஆர்வலர்)

முன் பதிவு செய்ய:


- கல்விப்பணியில்...

அறம் அறக்கட்டளை, திருப்பூர்.

க.எண். 24/ 36,காயத்திரி டவர்ஸ்,
பிண்ணி காம்பவுன்ட்,
திருப்பூர்-641601