ஞாயிறு, 18 அக்டோபர், 2015

வித்யாரம்பம்- 2015 அழைப்பிதழ்




அறம் அறக்கட்டளை சார்பில் நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும்  ‘எழுத்தறிவித்தல் விழா’ சிறப்பாக நடைபெற உள்ளது.

திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், விஜயதசமியன்று (22.10.2015, வியாழக்கிழமை)  காலை 7.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை, இந்நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது.

கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் ஆசி பெற்றவர்களாக நாம் எழுத்தாளர்களைக் கருதுகிறோம். அத்தகைய எழுத்தாளர்களின் திருக்கரங்களால் குழந்தைகளுக்கு எழுத்தறிவிப்பது கலைவாணியின் அருள் பெறுவது போல.

இந்த ஆண்டு எழுத்தறிவிப்போர்:
  • திரு. சா.தேவதாஸ்
              சாஹித்ய அகாதெமி விருதாளர்
.
  • திரு. சுப்ரபாரதி மணியன்
               எழுத்தாளர்
.
  • திரு. சு.வேணுகோபால்
              ‘வெண்ணிலை’ நாவலாசிரியர்
.
  • திரு. இசை
               கவிஞர்
.
-இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, பள்ளி செல்லத் தயாராக உள்ள தங்கள் குழந்தைகளுக்கு ‘வித்யாரம்பம்’ செய்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறோம்.


  • அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.
  • முன்பதிவுக்கு:  98422 27505,  98949 33877,  95009 57080


..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக